search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்"

    பொன்னமராவதி பகுதியில் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தடையை மீறி பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் சுமார் 95 கிலோ பறிமுதல் செய்தனர்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு செய்ததில் தடையை மீறி பயன் படுத்தப்பட்ட பிளாஸ்டிக்  பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் சுமார் 95 கிலோ பறிமுதல் செய்தனர்.
     
    மேலும், வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள், உணவகங்கள், மளிகைகடை களில் பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வணிகநிறுவன உரிமைதார்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் அரும்புராஜ் மற்றும் சுகாதாரபணியாளர்கள் ஆகியோர் உடனுருந்தனர்.
    ×